monsun is comming II
Primary tabs

monsun is comming II
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதனால், வடதமிழகத்தின் சில இடங்களில் கனமழையோ அல்லது மிக கனமழையோ நீடித்தாலும் கூட, இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இருக்காது என்பது தெரியவருகிறது. இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "சென்னைக்கு கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில்
நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடலில் நெல்லூருக்கு தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது, மேலும் வலுப்பெற்று புயலாக மாறி, ஆந்திரா - ஒடிசா இடையே கரையைக் கடக்கும். இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெயும். ஒரு சில இடங்களில் மிக கனத்த மழை பெய்யக் கூடும். இருப்பினும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தமிழகத்தை விட்டு வேறு திசையில் நகர்ந்து வருவதால் படிப்படியாக மழை குறையும். இன்று மாலை முதலே படிப்படியாக மழை குறைய வாய்ப்பிருக்கிறது" என்றார் அவர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை கேளம்பாக்கத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
- Log in to post comments
- 250 reads